Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை, மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை, இலங்கை ஆசிரியர் சேவை மூன்றாம் வகுப்பு இரண்டாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, 25,26 ஆம் திகதிகளில், கிழக்கு மாகாண பேரவை செயலகத்தில் நடைபெறவிருந்த நிலையில், மே மாதம் 03, 04ஆம் திகதிகளுக்குப் பிற்போட்டது.
இந்நிலையில் மறுஅறிவித்தல் வரும்வரை இந்நேர்முகப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக, அவர் அறிவித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சைக்குக் கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளுமாறும், இப்பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago