2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பத்து கட்டாக்காலிகள் சிக்கின

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையுடன் இணைந்து, களுவாஞ்சிக்குடி பொலிஸார், நேற்று (29) மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திடீர் நடவடிக்கையின்போது, பத்து கட்டாக்காலி மாடுகள் பிடிபட்டதோடு, அவையனைத்தும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டாக்காலிகள் தொடர்பில், அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும், இதை, சிலர் கவனத்தில் கொள்ளவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X