2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்கு காசோலை வழங்கி வைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 14 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியிலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்  மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கு கோரிக்கையொன்றினை  விடுத்தார்.

அக்கோரிக்கையை கருத்திற்கொண்ட, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம  நேற்று(13) ஏறாவூர் மாக்கான் மாக்கார் மஹா வித்தியாலயத்தில் நிலவுகின்ற தளபாட குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்குமாறு இரண்டு இலச்சம் ரூபாய் காசோலையினை வழங்கி வைத்தார்.

முன்னாள்  சுகாதார  அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கருத்து தெரிவிக்கும் போது, 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை அதிகளவில்  நிவர்த்தி செய்து வருவதாகவும் மிகுதியான பாடசாலைகளில் நிலவுகின்ற குறையாடுகளை கூடிய விரைவில் நிவர்த்திக்கவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .