2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பிரிந்து சென்ற மு.கா போராளிகள் ஒன்றிணைய வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற அதன் போராளிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்க்கமான தீர்மானங்களுடன், ஏறாவூர் அஷ் - ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அறக்கட்டளை புனரமைக்கப்பட்டுள்ளது என, அதன் செயலாளர் எம்.ஐ.எம். மாஹீர் தெரிவித்தார்.

மேற்படி அறக்கட்டளையின் புனரமைப்புக் கூட்டம், ஏறாவூரில் நேற்று (18) மாலை இடம்பெற்றது.

கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டதோடு, பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேலும் விவரம் தெரிவித்த செயலாளர் மாஹீர், “எமது அமைப்பு, நீண்ட காலமாக இயங்கி வந்து இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் போராளிகள் மற்றும் புத்திஜீவிகள் முன்னிலையில் இந்த அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு, புதிய பொது நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இங்கு எடுக்கப்பட்ட பொது முடிவுகளின் முக்கியமானவை பின்வருமாறு:

- முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காட்டித் தந்த வழியில், ஏறாவூரின் எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் ஒருமித்து இயங்குதல்

- பக்கச் சார்பின்றி தூய்மையான இஸ்லாமிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளல்

- மறைந்த தலைவரின் ஞாபகார்த்தமாக, ஏறாவூரில் ஒரு கிராமத்துக்கு "மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தை" எனப் பெயரிடல்

- ஏறாவூர் உள்ள ஸக்காத் கிராமத்துக்கு 1.3 கிலோமீற்றர் நீளமுடைய கொங்கிரீட் வீதி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல்.

பொது முடிவுக்கு மேலதிகமாக, பின்வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர்:

தலைவர் - எஸ்.எம்.எம். ஷஹீத், செயலாளர் - எம்.ஐ.எம். மாஹீர், பொருளாளர் - கே.எம். பைறூஸ், உப தலைவர் - எம்.எம். றாஸிக், உப செயலாளர் - எம்.பி.ஜே. ஆப்தீன்.

இவர்களுக்கு மேலதிகமாக நிர்வாகக் குழு, கலந்தாலோசனைக் குழு என்பனவற்றுக்கும் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .