2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய தலைவர் நியமனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 31 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக, மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை, இன்று (31) நியமிக்கப்பட்டார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2018/2019 காலப்பகுதிக்கான பொதுச் சபைக் கூட்டம், நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றது.

இதன்போது, அங்கு இடம்பெற்ற தலைவர் தெரிவில் அமைதியின்மை ஏற்பட்டதால், தலைவர் தெரிவு பிற்போடப்பட்டு, அதற்கான பொறுப்பு, காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிடம் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவரான மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை பலாஹியை, சம்மேளனத்தின் தலைவராக நியமிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில், சம்மேளனத்தின் புதிய தலைவராக மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .