2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

புனானை தடுப்பு முகாமில் 58 பேர் குடும்பங்களுடன் இணைப்பு

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கடந்த 14 நாள்களாக தடுத்து வைக்கப்பட்டு, மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதன்கீழ், குறித்த முகாமில் இருந்து இராணுவத்தினரின் பஸ் மூலமாகவும் தனியார் வாகனங்கள் மூலமாகவும் 58 பேர் கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன், இன்று (30) இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, கைக்குழந்தைகள், சிறுவர்கள், பெரியோர்கள் ஆகியோர் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .