2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (28) கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவுக்கு முன்னாள் இந்தக் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முதலாவது கையொப்பத்தை இட்டு, கையொப்ப வேட்டையை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைத்தினம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து கையொப்பம் பெறப்பட்டு, அதனை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீர்வும் முன்வைக்கப்படவேண்டுமென, இங்கு வலியுறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .