2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பொதுச்சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் ; இருவர் கைது

வா.கிருஸ்ணா   / 2018 ஜனவரி 06 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் டெங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காத்தான்குடியில் ஒரு வாரத்தில் இரண்டு சிறுமிகள் டெங்கினால் உயிரிழந்துள்ள நிலையில், காத்தான்குடி பிரதேசம் டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காத்தான்குடிப் பகுதியில் நேற்று முன்தினமும்  விசேட டெங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொதுச்சுகாதார பரிசோதகர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில், தமது பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூடி தீர்மானிக்கவுள்ளதாகவும் அச்சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .