2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களின் முதலாம் தரத்துக்கு செல்லும் பிள்ளைகளுக்கு, பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று  நடைபெற்றது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் சிந்தனைக்கு அமைவாக, பொலிஸ் குடும்ப நல சங்கம் , பொலிஸ் சேவை பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நாடெங்கிலும் உள்ள பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2018ஆம்  ஆண்டு முதலாம் தரத்துக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

இதற்கஅமைய,  மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள்  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற  தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஜாகொட ஆராச்சி, மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர , மட்டக்களப்பு 12  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் சிறார்கள் கலந்துகொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .