2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ் சார்ஜன் மீது சந்தேகநபர் தாக்குதல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 19 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குற்றச்சாட்டொன்றில் நேற்று (18) கைதுசெய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட  சந்தேகநபரொருவர், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வைத்து, அழைத்து வந்த பொலிஸ் சார்ஜன் மீது, திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயது இளைஞனான குறித்த சந்தேகநபர், 2 கிராம் கஞ்சாவைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இளைஞனைக் கண்காணிப்பில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்டபோது, தன்னைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து வந்த பொலிஸ் சார்ஜன் மீது பாய்ந்து, அவரது முகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்து  பொலிஸ் உத்தியோகத்தர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் மேலதிக விசாரணைகளைத் தாம் நடத்தி வருவதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .