2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’போதை மாத்திரைகள் விற்பனையில் சிறுபான்மையினர்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என, கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று முன்தினம் (10) தெரிவித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம் என்பது பற்றி நாம் யோசிக்கவில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக இருந்துக் கொண்டு, நாங்கள் பெரிதாக நன்மைகளை  அனுபவித்துக் கொண்டிருக்கின்றதாக பெரும்பான்மை சமூகம் எங்களை பட்டை தீட்டுகின்றார்கள் என்பதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

எமது மீது சுமந்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களாக, குடிகாரன், மாத்திரை மற்றும் தூள் வியாபாரிகளாக சித்தரிக்கப்பட்டு பணத்திற்காக சொந்த தாயின் கழுத்தை வெட்டுபவர்களாக திகழும் நிகழவுகளை நாம் கண்டு கொள்ளவில்லை.

இவைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் எங்களது இருப்பு இந்த நாட்டில் கேள்விக் குறியாக மாறிவிடும். எங்களுக்கு இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல் இருக்கும் என்று நான் அச்சம் கொள்கின்றேன்.

சிறுபான்மை சமுகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்பதற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள். அதாவது கஞ்சா, போதை மாத்திரை, குடு என்பவற்றை விற்பனை செய்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X