Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
"இளைஞர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்க, ஒருங்கிணைந்த கண்காணிப்புத் தேவை" என, ஏறாவூர் நகர பதில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.
வாழ்வாதார சுயதொழிலுக்கான உபகரணத்தொகுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொதுமுகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில், ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை மண்டபத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்ததாவது, "வாழ்வாதார சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதிகளை நாம் தகுதியானவர்களை இனங்கண்டு வழங்கி வருகிறோம். இவற்றைக் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்கள் எல்லோரும் பயனடைந்து கொள்ள வேண்டும்.
நமது பிரதேசத்திலே தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அது, ஊகிக்கமுடியாத பல்வேறு வடிவங்களில் ஊடுருவியுள்ளது.
இதனையிட்டு இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக நிறுவனங்கள் அத்தோடு ஒவ்வொரு குடும்பமும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நேரத்தை வீணடிக்காத பொழுது போக்குகள், தேகாரோக்கிய விளையாட்டுத்துறை என்பன மேம்படுத்தப்பட வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிந்தளவு முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் அபிவிருத்தி, மறுபக்கம் போதைப் பொருள் பாவனை என்றிருந்தால், அபிவிருத்தியைத் தாண்டி அழிவுதான் மிஞ்சும். நீண்டகாலத் திட்டம் தீட்டப்பட்டு சகலதுறை அபிவிருத்தியும் இடம்பெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
29 minute ago
50 minute ago