Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, உன்னிச்சை வரையிலான பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கும் செயற்பாட்டுக்கான குழாய்கள் பொருத்தும் ஆரம்ப நிகழ்வு, நேற்று (25) இடம்பெற்றது.
உன்னிச்சை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனால் நாடாளுமன்றத்திலும் உரிய அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் நேரடியாக தெரியபடுத்தி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்ததன் மூலம், இப்பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிகழ்வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆரம்பித்துவைத்ததுடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, குடிநீர் விநியோகம் வழங்கப்படாமலிருக்கும் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் குடிநீர் வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago