2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பிலும் மனித எச்சங்கள்

Editorial   / 2019 மார்ச் 06 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும சில தடயங்கள் இன்று (06) மீட்கப்பட்டுள்ளவென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரை வீதியோரத்திலிருக்கும் தனியார் காணியொன்றில் தற்காலிக கிணறு ஒன்றை அமைப்பற்காக, குழி வெட்டும் போதே, மனித எச்சங்களென சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டுள்ளன.  இதையடுத்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சங்கள், சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான, மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரும் ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .