2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் தாயொருவருக்கு ஒரே சூலில் மூன்று சிசுக்கள்

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 07 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியைச் சேர்ந்த தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், ஒரே சூலில் மூன்று குழந்தைகளை, கடந்த திங்கட்கிழமை பிரசவித்துள்ளார் .

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா, மண்முனை வீதி, தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் காயத்திரி என்ற 26 வயதுப் பெண்ணே, தலைப்பிரசவத்தில் ஒரே சூலில் குறித்த மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளாரென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர் .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குறித்த தாய்க்கு மேற்கொண்ட அறுவைசிகிச்சை மூலம், இந்தக் குழந்தைகளை அவர் பிரசவித்துள்ளாரெனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மூன்று குழந்தைகளில் முதல் பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையுடனும் இரண்டாவது ஆண் குழந்தை 1 கிலோ 800 கிராம் எடையுடனும் , மூன்றாவது ஆண் குழந்தை 1 கிலோ 540 கிராம் எடையுடனும் பிறந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

குறித்த தாயும் மூன்று குழந்தைகளும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், நலமுடன் இருப்பதாக விடுதி வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .