Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 மார்ச் 07 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியைச் சேர்ந்த தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், ஒரே சூலில் மூன்று குழந்தைகளை, கடந்த திங்கட்கிழமை பிரசவித்துள்ளார் .
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா, மண்முனை வீதி, தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் காயத்திரி என்ற 26 வயதுப் பெண்ணே, தலைப்பிரசவத்தில் ஒரே சூலில் குறித்த மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளாரென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குறித்த தாய்க்கு மேற்கொண்ட அறுவைசிகிச்சை மூலம், இந்தக் குழந்தைகளை அவர் பிரசவித்துள்ளாரெனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மூன்று குழந்தைகளில் முதல் பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையுடனும் இரண்டாவது ஆண் குழந்தை 1 கிலோ 800 கிராம் எடையுடனும் , மூன்றாவது ஆண் குழந்தை 1 கிலோ 540 கிராம் எடையுடனும் பிறந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குறித்த தாயும் மூன்று குழந்தைகளும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், நலமுடன் இருப்பதாக விடுதி வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2024
20 Apr 2024