2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு

Editorial   / 2018 மே 18 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18)மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் நினைவு கூறப்பட்டது.

இதில் ஒரு நிகழ்வாக  உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் அன்னதான நிகழ்வும் வாழைச்சேனை கவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பொதுநலசேவை அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான க.நல்லரெட்ணம் கு.குணசேகரம் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு இணைப்பாளர் த.சுரேஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதுடன்  ஆலயத்தில் இடம்பெற்ற பூசை நிகழ்வுகள் மற்றும் நினைவு சுடர் ஏற்றலிலும் பங்கு கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .