2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

பேரின்பராஜா சபேஷ்   / 2019 மார்ச் 17 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் வலையமைப்பைக் கொண்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்துக்கு 2019ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஹாலித்தீன் ஹமீர் தலைமையில், மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே, புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதனடிப்படையில், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவராக கிரான் குளத்தைச் சேர்ந்த ம.பிரியங்கன், மாவட்டத்தின் 14 இளைஞர் கழகப் பிரதேச சம்மேளனங்களின் பிரதிநிதிகளால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

செயலாளராக போரதீவுப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த வே.மிதுஷா, பொருளாளராக ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த வ.சஜிந்தன், அமைப்பாளராக ஏறாவூர் நகரைச் சேர்ந்த ஜே.எம். அசீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பிரதேச செயலாளர் பிரிவுகளினதும், பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களின் நிறைவேற்றுக் குழு இளைஞர், யுவதிகள் இதில் பங்குபற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .