2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு மக்களின் ’கூட்டமைப்புக்கான செய்தி’

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

வடக்கு, கிழக்கு மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ​செய்தியைக் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், த.தே.கூ தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதே இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள், இம்முறை தங்களது வாக்குரிமையை நன்றாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செயற்றிறனுடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .