Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 செப்டெம்பர் 29 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராராஜசிங்கத்தின் படுகொலை வழக்குத் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து, இன்று (29) காலை சந்தித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, நாமல் ராஜபக்ஷ எம்.பி தலைமையிலான குழுவினர் விஜயம் செய்தனர்.
இதன்போது, பிள்ளையானுடன், நாமல் ராஜபக்ஷ எம்.பி, சிறைச்சாலையில் சுமார் அரை மணிநேரம் கலந்துரையாடினார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வழக்கில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிள்ளையான், சிறைவாசம் அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
37 minute ago
2 hours ago