2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு. ரயிலில் மோதுண்டு ஆணொருவர் ஸ்தலத்தில் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையப் பகுதிக்குட்பட்ட கூழாவடிப் பகுதியில், இன்று (05) அதிகாலை ரயிலில் மோதுண்டு ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே, இவர் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக, சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .