2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மணல் அகழ்ந்த இருவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருவர், ஓட்டமாவடி பகுதியில் வைத்து இன்று (19) காலை கைதுசெய்யப்பட்டனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

அத்துடன், சந்தேகநபர்கள் வந்த உழவு இயந்திரங்கள் இரண்டும், இதன்போது கைப்பற்றப்பட்டன எனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .