2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மத, சமூகச் செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, நாட்டின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து, இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும், மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளனர் என, தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.

இந்த விஜயம், மிக விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

முரண்பாடற்ற, நீண்ட, நிலைத்து நிற்கும் சமாதானத்துக்கு பல்வேறுபட்ட இலங்கையர்கள் அனைவருக்குமிடையிலான கலந்துரையாடல்களும், விவாதங்களும், இணக்கத்துடனான புரிந்துகொள்ளும் முடிவுகளும் அவசியம் என்பதையும் மீள வலியுறுத்துவதற்காகவே, இந்தச் சமூக நல்லிலணக்க விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X