2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மரங்களைப் பாதுகாப்போம்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட நாசிவந்தீவு சிவ வித்தியாலய மாணவர்களால், “மரங்களைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளிலான வீதி நாடகம், நாசிவந்தீவு, ஆலையடி வீதியில், நேற்று (01) அரங்கேற்றப்பட்டது.

இந்த வீதி நாடகம், அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தலைமையில், சுற்றாடல் குழுப் பொறுப்பாளர்களான லோ.கேசவன், போ.விசாந்தினி, ர.ஜெகவீரன் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதால், நாட்டில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவரும் பொருட்டு, இந்த வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதாக, வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .