2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மர்கஸூல் ஹிதாயா வீட்டுத் திட்டம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 18 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் 'மர்கஸுல் ஹிதாயா' வீட்டுத்திட்டம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால், நேற்று  (17) திறந்து வைக்கப்பட்டது.

கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியில், ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வீட்டுத்திட்டத்தில் 22 வீடுகள் உள்ளடங்கியுள்ளன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் காலித் ஹவ்தான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், இஸ்லாமிக் ரிலீப் கமிட்டி தலைவர் எம்.மிஹ்லார், ஸலாம் கலாசாலையின் தலைவர் எஸ்.ஏ. நளீம் (நளீமி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .