2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மஹிந்த நிராகரித்தமையால் ரணிலுக்கு ஆதரவு’

வா.கிருஸ்ணா   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை, மஹிந்த ராஜபக்‌ஷ நிராகரித்த நிலையில், அவற்றில் சிலவற்றை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே, தாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்ததாக, த.தே.கூவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு., பார் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கூட்டமைப்பை விமர்சனம் செய்யும் தமிழ்க் கட்சிகள், வட, கிழக்கு மக்கள் சார்பாக எத்தனை வழக்குகளை, நீதிமன்றுக்குக் கொண்டுசென்று நடவடிக்கையெடுத்தீர்கள் என்பதைப் பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X