2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாணவிக்கு நீதி கோரிஆர்ப்பாட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் மாணவியொருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டமையைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும், காத்தான்குடியில் நேற்று முன்தினம் (16) மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை தேவையற்ற விதத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பிரசுரிப்பதைக் கண்டிப்பதாக, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், காத்தான்குடி மாணவியொருவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்த மாணவனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் மாணவிக்கு நீதியும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X