2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாநகர சபையின் புதிய ஆணையாளர் கே.சித்திரவேல் கடமைகளை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு, மாநகர சபையின் கடமைகளை பொறுப்பேற்றுள்ள புதிய ஆணையாளரையும்  பதவி உயர்வு பெற்று செல்லும் முன்னாள் ஆணையாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு, மாநகர சபைக்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்று  வருகை தந்துள்ள புதிய ஆணையாளர் கே.சித்திரவேல் ஆணையாளரையும்  கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளராக பதவி உயர்வு பெற்று செல்லும் முன்னாள் ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளராக பதவியேற்று வருகை தந்துள்ள  பிரகாஸ் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மாநகர சபை பிரதான நகர மண்டபத்தில் நடைபெற்றது

 

ஆரம்ப நிகழ்வாக நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து, நகர மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு சிறப்புரைகளும்  பிரியாவிடை  நினைவு சின்னங்கள்,   பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

 

மட்டக்களப்பு, மாநகர ஆணையாளர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர சபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன்  கணக்காளர், பொறியியளாளர்,  உறுப்பினர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள்  நகர சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X