2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நன்கொடை

நடராஜன் ஹரன்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கற்றல் வசதியை மேம்படுத்தும் முகமாக, கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி மு.ரவியின் முயற்சியால், இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்துத் தூதரகம், 2.7 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

இந்நிதி ஒதிக்கீடு, குறித்த மாணவர்களுக்கு கணினிகள், கண் பார்வையற்ற மாணவர்களுக்கான தட்டச்சு இயந்திரங்கள், இலத்திரனியல் அச்சுப் பிரதிக் கருவிகள், பதிவுக் கருவிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்யப் பயன்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .