2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மினிசூறாவளியால் 16 வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன

Editorial   / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

 

மட்டக்களப்பு, ஓட்டமாவடி மஜ்மாநகர் கிராமத்தில், நேற்று (29) மாலை வீசிய மினி சூறாவளியால், 16 வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுச் சென்றுள்ளன.  

மஜ்மாநகர் கிராமத்திலுள்ள ஸகாத் வீட்டுத் திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்துக்கு உட்பட்ட வீடுகளின் கூரைகளே, பாதிப்படைந்துள்ளன.

அத்துடன் மஜ்மாநகர் கிராமத்திலுள்ள சீமெந்து கல் வெட்டும் நிலையத்தின் கூரைத் தகடுகளும் காற்றில் அள்ளுண்டுச் சென்றுள்ளன.

மினிசூறாவளி காரணமாக எவருக்கும் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X