2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதுமையிலும் பரீட்சை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி அல்-குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையால் வருடந்தம் நடத்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் பரீட்சை, இவ்வருடமும் காத்தான்குடியில் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் பரீட்சை, காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாசல் மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்ற போது, காத்தான்குடி ஆறாம் குறிச்சி தாறுஸ்ஸலாம் குர்ஆன் மதரசா சார்பில், காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரான ஆதம்லெவ்வை ஹாஜி முகம்மதிபுறாலெவ்வை என்பவர் தோற்றியுள்ளார்.

35 வருட அனுபவமிக்க ஆயுர் வேத வைத்தியரான இவர், அல்-குர்ஆன் ஓதுவதற்கு தனக்கு அதிகம் விருப்பம் எனவும் வயது போன காலத்தில் அல்குர்ஆன் பரீட்சைக்குத் தோற்றக் கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .