2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முத்தமிழ் வித்தகரின் ஜனனதினம் அனுஷ்டிப்பு

Princiya Dixci   / 2021 மே 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129ஆவது ஜனனதின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள சுவாமி விபுலானந்தர் நீரூற்று பூங்காவில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர மேயர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டதுடன், பக்தி கீதமும் இசைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X