Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
முரண்பாடுகளுக்கு இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் சாயம் பூசுவதால் பேரழிவுகள்தான் ஏற்படுமென, கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் செயலமர்வில் கலந்து கொண்டு, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஒரே சமூகமாக, ஒரே இனமாக, ஒரே மொழி பேசுவோராக இருந்துவிட்டால் அப்பொழுது மக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவிடாதா என்ற கேள்வியை நாம் எழுப்பினால் மனிதர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானது அவை தவிர்க்க முடியாதது என்றும் அறிந்து கொள்ள முடியும்.
“எங்கே நாம் ஒருங்கிணைப்பை இழந்திருக்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். வர்த்தகமும் வியாபாரமும் இன நல்லிணக்கத்துக்கான இணைப்புப் பாலமாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.
“அதேவேளை, முரண்பாடுகள் ஏற்படுமிடத்து நாம் வேறு வேறு திசைகளாகப் பிரிந்து தனிமைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டு பிரிவினை கோரி நிற்கின்றோம்.
“வாழ்விடம், கல்விக் கூடம், வேலைத் தளம், தொழில்துறை சார்ந்த இடங்கள், பொழுது போக்கிடங்கள், சமய, கலாசார, பண்பாட்டு இடங்கள் இங்கெல்லாம் மற்றவர்களோடு எவ்வாறு பரிமாற்றங்களை ஊடாட்டங்களை தொடர்பாடலை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
“இது பற்றி சிவில் சமூகம் இன்னும் அதிகமாகச் சிந்தித்தால் பிரிந்து நின்று அழிவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எல்லோரும் சேர்ந்து அக்கபூர்வமான அழகிய பன்மைத்துவ சமூகத்தையும் அபிவிருத்தியுடன் இணைந்த சகவாழ்வும் நிம்மதியுமான நாட்டையும் உருவாக்கலாம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago