2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்கப்படவுள்ளனர்

வா.கிருஸ்ணா   / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோல் நிகழ்வு, அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நாளை (17) காலை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வி.மயில்வாகனம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு அதிதிகளாக வலயக் கல்வி அலுவலகத் திட்டமிடல் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் வை.சி.சஜீவன், வலய ஆரம்பப்பிரிவு உள்ளக சேவை ஆலோசகர் திருமதி எஸ்.பூபாலசிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வாண்டு 115க்கும் அதிகமான புதிய மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனரென, பாடசாலை அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .