Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 06 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரக்கறிகளை ஏற்றிவந்த லொறியொன்று குடைசாந்ய்ததில், நால்வர் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிக்கந்தைப் பகுதியில் நேற்று முன்தினமிரவு (04) இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறிச் சாரதி, உதவியாளர்கள் மூவர் என மொத்தமாக நால்வரும் மீட்கப்பட்டு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் என்று, ஏறாவூர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
தம்புள்ளை மத்திய வியாபாரச் சந்தையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு, ஏறாவூரை நோக்கி வரும்பொதே, லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago