2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விசேட செயலமர்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் கடமை புரிவோர்களுக்கு, நிர்வாகிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட செயலமர்வு, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (14) நடைபெற்றது.

இச்செயலமர்வில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் சிறந்த மஸ்ஜித்களுக்கு விருது வழங்கள், இதுவரை பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்களைப் பதிவுசெய்தல் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள்  திணைக்களக் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜுனைட் நளீமி, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.ஐ.மாஜிடீன்,  முஸ்லிம சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சியாத், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .