2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் தேசிய பாட வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என, விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில், கல்வியமைச்சின் “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூடக் கட்டடத் திறப்பு விழா, இன்று (01) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இன்றையை நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுவதை கண்டேன் என்றார்.

வடக்கு, கிழக்கில் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டுமென்றும் நமது பிரதேசத்தின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டுப்பற்றை, இறையான்மையை ஓரளவுக்காவது வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தேசிய கீதம் படித்துக் கொள்ள வேண்டும். தேசிய கீதம் பாடும் போது எல்லோரும் பாடுவதற்கு பழகிக் கொள்ள வேண்டுமென்றார்.

இந்த அரசாங்கத்தில் பிரச்சனைகள், சிக்கல்கள், சருக்கல்கள் நிறைய இருந்த பொழுதிலும் அரசாங்கம் கல்விக்காக, பிரதேச அபிவிருத்திக்காக பல கோடிக் கணக்கான மில்லியன் ரூபாய்களை மாவட்டம் முழுவதும் வழங்கி வேலைத் திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்று அதிகம் விரும்பது போல இந்த அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றது என்றார்.

பாடசாலை அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜௌபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .