2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வலையிறவுப் பாலத்துக்கு ‘மின் விளக்குகளை பொருத்தவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன்

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட வலையிறவுப் பாலத்துக்கு, மின் விளக்குகள் பொருத்துமாறு, உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள்  கோரிக்கை முன்வைக்கின்றனர்.

குறித்த பாலம், எழுவான் கரையிலிருந்து படுவான் கரைப் பிரதேசத்துக்குச் செல்வதற்கான பிரதான பாதையாகும். இரவு வேளைகளில் அதிகளவான பிரயாணிகள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணம் செய்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

மழை காலங்களில் போது, இப்பாலத்தினூடாக மட்டக்களப்பு நகருக்குச் செல்வது சிரமமாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 பிரயாணிகளின் நலன் கருதி, மிக விரைவாக குறித்த பாலத்துக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .