2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுணதீவில் யுவதிகளின் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் விற்பனையும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தால் நடாத்தப்பட்ட தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும், வவுணதீவு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில், இன்று (21) நடைபெற்றது.

கடந்த ஆண்டில் தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள், ஆடை அலங்காரம் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவுசெய்த யுவதிகளே, இக்கண்காட்சியிலும் விற்பனை நிகழ்விலும் ஈடுபட்டனர்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், சிரேஷ்ட தையல் போதனாசிரியை உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .