2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வவுணதீவு சம்பவம்; மேலும் ஒருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர், இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளாரென, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா, கரையாக்கந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே, குறித்த புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடிகான் ஒன்றிலிருந்து புலனாய்வுப் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டே மேற்படி நபர் கைது  செய்யப்பட்டுள்ளாரெனத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X