2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வான் விபத்தில் இருவர் பலி; ​ஐவர் படுகாயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

மட்டக்களப்பு – பொலொன்னறுவை மின்னேரி பகுதியில் இன்று (26)அதிகாலை இடம்பெற்ற வான் விபத்தில், இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனரென மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.   

விபத்தில் உயிரிழந்தவர்கள், கதுறுவெல பகுதியை சேர்ந்த  ஏ.எம்.இன்ஷாப் வயது (28), இம்ஷித் வயது (29)எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை காயமுற்ற இளைஞர்கள்  ஐவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெருநாள் விடுமுறையில், நுவரெலிய சென்று, மீண்டும் தமது ஊர் திரும்பிய குழுவினர் பயணித்த வானே  பொலொன்னறுவை மின்னேரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மரங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே, இவ் விபத்து  ஏற்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடபில், மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .