2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் கைதிகள் தப்பியோட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை தப்பிச் சென்ற கைதிகள் இருவரில் ஒருவர். சில மணித்தியாலங்களில் சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மற்றையவரைத் தேடும்பணி தொடர்கின்றது.

 போதைவஸ்த்து மாத்திரைகளைத் தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த வேளை, அவர்கள் மீதான விளக்கமறியல் 23.8.2018 வரை,  வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X