2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘விட்டுக் கொடுப்புக்குத் தயார்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

கிழக்கு மாகாணத் தமிழர்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கும் அபிவிருத்தியுடன் கூடிய அபிலாஷைகளை வென்றெடுப்பாதற்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, விட்டுக் கொடுப்புடன் பங்களிப்புச் செய்ய முன்வருமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு, நேற்று (12)இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனிப்பட்ட அரசியல் அபிலாசைகளுக்காகவோ, பதவிகளை பெற்று ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருப்பதற்காகவோ, அரசியலில் பிரவேசித்த கட்சியல்லவென்றும் தெரிவித்த அவர், தம்மை ஆகுதியாக்க துணிந்த இளைஞர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட கட்சியாகுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .