2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு நடைபவனி

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில், “ஒரு நடை மாற்றுத் திறனாளிகளுக்காக” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு நடைபவனி, இன்று ​(08) காலை நடைபெற்றது.

எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள “தமிழ் பரா” மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு நிகழ்வையொட்டி, இந்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

மட்டக்களப்பு, நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபவனியில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைப்பால் நடத்தப்படும் பாடசாலைகளின் மாணவர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .