Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 12 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், துஷாரா
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 21 வயதான இளைஞனின் சடலம், நேற்று (11) இரவு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பலாச்சோலை முதலாவது குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் நிமலேந்திரன் பிரசாந்த் (வயது 21) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.
கூலித் தொழிலாளியான இவர், பெற்றோருடனும் சகோதரர்களுடனும் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவ்வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பகல் வேளைக்குப் பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டின் அறைக் கதவு திறக்கப்படாமலே தாழ்ப்பாள் இடப்பட்ட நிலையில் பூட்டப்பட்டு இருந்ததால், சந்தேகம் கொண்டு, அறையைத் திறந்து பார்த்தபோது, இவர் சடலமாகக் கிடப்பது தெரியவரவே பொலிஸாருக்கு அறிவித்து, சடலம் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் உடற் கூறாய்வுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago