2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீட்டிலிருந்து இளம் தாயின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 12 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயதான இளம் தாயொருவரின் சடலத்தை, நேற்று முன்தினம் (10) மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று வயதுக் குழந்தையொன்றின் தாயான சிவானந்தம் ஜானு என்ற இளம் தாயின் சடலமே, பொலிஸாரால் மீட்கப்பட்டது.

வீட்டில் சடலமொன்று இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும், சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக, செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளில், ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .