2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீதி புனரமைப்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செப்பனிடப்படாதிருந்த ஏறாவூர் காட்டுப்பள்ளி குறுக்கு வீதிக்கான புனரமைப்புப் பணியை, மீன்பிடி, கிராமியப் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர்அலி, இன்று (29) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இவ்வீதி, மிக நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாதிருந்தமையால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர் எனத் தெரிவித்து, இவ்வீதியைப் கிராமியப் பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின்கீழ் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என, பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .