Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில், இன்று (01) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வான் விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த வான், காத்தான்குடி -கபுறடிச்சந்தியில் வீதியை விட்டு விலகி, வீதியின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பூச்சாட்டியில் மோதியுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு நோக்கி எதிரே வந்து கொண்ருந்த மோட்டார் சைக்கிளையும் வான் மோதித் தள்ளியமையால், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விருவரும், மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், வானில் வந்த இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கான காரணமானத் தெரியவந்துள்ளதுடன், இவ்விபத்தில் வான் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago