2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதியோரத்தில் ஆண் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்
 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதியோரத்தில் ஆணொருவர் உயிரிழந்த நிலையில், இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவரே, நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் வீதியோருத்தில் உள்ள வெள்ள நீரில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
குறித்த இடத்துக்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .