2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெடிபொருள்கள் இருப்பதாக மட்டக்களப்பில் வதந்தி

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கி மற்றும் உள்ளூராட்சிமன்றம் ஒன்றில்,  மர்மப்பொருள்கள் இருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மட்டக்களப்பு நகரூடாகச் செல்கின்ற அரசடி வீதி,  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினூடாகவே, போக்குவரத்து இடம்பெறுவதாகவும் மட்டக்களப்பில் சற்றுப்பதற்றமான சூழலலொன்று நிலவிவருவதாகவும்  உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .