2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெற்றுக்காணியிலிருந்து கைக்குண்டுகள், வெடிப்பொருள்கள் மீட்பு

Editorial   / 2019 மே 02 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

 

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு எல்லைப்புறத்தில் உள்ள தனியார் வெற்றுக்காணியொன்றில் வீசப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிப்பொருள்களை,  இராணுவத்தினர், நேற்று (01) மாலை மீட்டுள்ளனர்.

கைக்குண்டுகள் 2, பெரியக்கத்தி, ரீ-5 6 ரக தன்னியக்க துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மெகசின்கள்-6, ரவைகள் 365 என்பவையே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 

இவற்றில் கைக்குண்டுகள், மட்டக்களப்பு இராணுவ குண்டு செயலழப்புப் பிரிவினரால்  வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ன.

துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிப்பொருள்கள், ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .